சத்தீஸ்கர் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம்.!

Chhattisgarh - 8 naxalites

நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை அபுஜ்மர் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,  8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்தார் இருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாராயண்பூர் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐடிபிபி) ஆகியவை இணைந்து வழக்கமான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த மோதலானது நடைபெற்று இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
MS Dhoni - CSK vs RCB Match
Myanmar Earthquake - Indian govt relief
CSK Team IPL 2025
TVK leader Vijay - BJP State president Annamalai
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru
myanmar earthquake