மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி- சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி சந்திப்பு…!!

Default Image

மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும், சந்திர சேகர் ராவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு கோரினார். மூன்றாவது அணி தொடர்பாக, மம்தாவுடன் பேசி வருவதாக குறிப்பிட்ட சந்திர சேகர் ராவ், விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்