குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்.!
சிஏஏ சட்டத்திற்கு எதிரான 200க்கும் அதிகமான வழக்குகள் மீதான விசாரணை இன்று உச்சநீதிஅம்மன்றத்தில் தொடங்கியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் 2014க்குள் வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமனர்கள், பௌத்தர்கள், பாரசீகர்கள், கிருஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டது. (இஸ்லாமியர்கள் தவிர)
ஆதலால், இந்த சட்டம் பெரும் பேசு பொருளானது. இது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மேலும், இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம்,
இந்த விவகாரத்தில் சட்டம் தொடர்பாக மத்திய அரசை விளக்கமளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில்,
இன்று முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை தொடங்குகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற உள்ளது.