உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதி விபத்து! 6 பேர் பலி.!

Default Image

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயம்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில், பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலிசார் தெறிவித்தனர். இந்த விபத்து சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளதாக காவல் அதிகாரி ராஜேஷ் சிங் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலிசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஜெய்ப்பூரில் இருந்து பஹ்ரைச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தவறான திசையில் வந்த லாரி மோதியது.

மேலும், விபத்தில் காயமைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 4பேர் கவலைக்கிடமாகவும் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்