#BREAKING: தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Default Image

எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்திய முடியாது என மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும், சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்