#BREAKING: டிராக்டர் பேரணி வன்முறை...லுக் அவுட் நோட்டீஸ்..!

The Delhi Police has issued look-out notices to those involved in the FIR in connection with the violence at the Delhi Farmers' Tractor Rally.

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.  எஃப் ஐ ஆர்-இல் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க  டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம்  பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டம்.

டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக மாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டனர்.

அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர்.  இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது FIR பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.