#BREAKING: விமான விபத்து எதிரொலி..பெரிய விமானங்கள் தரையிறங்க தடை.!

Default Image

மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 ஆக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்