#BREAKING: மாலத்தீவில் தீ விபத்து – 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு!

மாலத்தீவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு என இந்திய தூதரகம் தகவல்.

மாலத்தீவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு என இந்திய தூதரகம் தகவல்.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென வீடுகளுக்கு பரவியதால் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். இதில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் தெரிவந்துள்ளது. மாலேயில் இந்தியர்கள் உட்பட 10 உயிரிழப்புகளை ஏற்படுத்திய சோகமான தீ விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

unknown nodeunknown node