#BREAKING : ஓமைக்ரான் தொற்று எதிரொலி – டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டங்களுக்கு தடை..!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் எதுவும் நடைபெற கூடாது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் 200-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகமானோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
அதன்படி கடைகள் வணிக வளாகங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025