எல்லையில் நடந்த மோதல்.. இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பும் பரஸ்பரம் நல்லுறவுடன் எல்லை பிரச்னையை அணுகலாம் என பேச்சுவார்த்தையில் கூறியதாக தகவல்கள் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025