தடுத்த பாதுகாவலர்..கத்தியை வைத்து குத்திய மாணவன்..வைரலாகும் வீடியோ!!

பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் . இந்த சம்பவத்தில் பலியான ஜெய் கிஷோர் ராய் , 52, ஹுனசமரனஹள்ளியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழாவில் பார்கவ் தனது நண்பர்கள் சிலருடன் கலந்துகொண்டார் . பிற்பகல் 3 மணியளவில், பார்கவ் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பணியில் இருந்த ராய் தடுத்துள்ளார். இருப்பினும், பார்கவ் கட்டாயப்படுத்தி வெளியேறினார். பின் பாதுகாவலர் வெளியேறினால் திரும்பி உள்ளே அனுமதி கிடையாது என்பது போல கூறியுள்ளார்.
இதனால் ஏற்கனவே, இருவருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. போதையில் இருந்த பார்கவ் கல்லூரியை விட்டு வெளியேற்றிவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்துள்ளார். அப்போது பாதுகாவலர் ஜெய் கிஷோர் ராய் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்கவ் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் ரொம்பவே பெரிதாக வெடித்தநிலையில் , மறைத்து வைத்திருந்த கத்தியை பார்கவ் எடுத்து பாதுகாவலரை கொடூரமாக குத்தி கொலை செய்தார். இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A 22-year-old #student has been arrested for allegedly stabbing a 52-year-old #securityguard of Sindhi College located in Kempapura, #Bengaluru north to death after the guard refused to let him re-enter the campus during the college’s annual day celebrations. pic.twitter.com/gQyg5a1HA6
— Madhuri Adnal (@madhuriadnal) July 4, 2024
மேலும், அஸ்ஸாமைச் சேர்ந்த பார்கவ், அவரது வகுப்பில் முதலிடம் பெற்றவர்களில் ஒருவர். ராயின் சக ஊழியர் ராஜசேகர் என்ற பாதுகாப்பு ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 101 இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025