சிறுமிகளை பாலியல் வன்கொடுமை பியாரே மியன் ! சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

Default Image

மத்தியப் பிரதேசத்தில்  சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பியாரே மியனை கைது செய்ய போபால் போலீசார்  சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

5 சிறுமிகளை பலமுறை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் 68 வயதை உடைய பியாரே மியா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனிடையே விதிமுறையை மீறியதாக மியாவிற்கு சொந்தமான கட்டிடத்தை போலீசார் இடித்துள்ளனர்.இதில் இருந்த பிளாட் ஒன்றில் நடனத்திற்கான தளம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .மேலும் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் விடுமுறைக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பல சிறுமிகளை துபாய் ,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து போபால்  ஏடிஜிபி (Additional Director General of Police)   உபேந்த்ரா ஜெயின்  கூறுகையில்,   “மியா பல சந்தர்ப்பங்களில் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஐந்து சிறுமிகள் புகார் அளித்தனர். மியா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்  கீழ் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்