14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன்!

Default Image

14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன்.

சண்டிகரில் அடுக்குமாடி  குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, நைட்டிக் என்ற சிறுவனுக்கும், அதே வயதுடைய மற்றோரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டினுள்ளே சென்று கத்தியை எடுத்துவந்து நைடிக்கை கத்தியால் குத்தியுள்ளான்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நைட்டிக், சம்பவ இடத்திலேயே  கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நைடிக்கின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சிறுவனை யார் கொன்றார்கள் என அங்கலாய்த்து நின்றனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் சிறுவனை கொன்றது யார் என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரு சிறுவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதும், அதில் ஆத்திரமடைந்து நைடிக்கை மற்றோரு சிறுவன் கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, கொலை செய்த சிறுவன் வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில், அவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்த நிலையில், அவர் சிறுவன் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்