இந்திய பேஷ்புக் டாப் நிர்வாகி அங்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்தார்…

Default Image

பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் தனது பதவியை செவ்வாய்கிழமை ராஜினாமா உள்ளார்.

பா.ஜ.க.வுக்கு சார்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,
அவர் தனது பதவியை ரா​ஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

தெலங்கானா பாஜக. தலைவர்க்கு ஆதரவாக அங்கி தாஸ் செயல்பட்டதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இந்தியா நிறுவனம்    அங்கி தாஸ் தவறாக எதுவும் செய்யவில்லை என்று  பதில் தெரிவித்தது.

இந்நிலையில்  தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து  அங்கி தாஸ்  மக்களை இணைத்தல் மற்றும் சமூகங்களை உருவாக்குதல் என்ற பேஸ்புக் நிறுவனத்தின்  இலக்குக்காக நீண்டக் காலம் உழைத்தேன்.

தற்போது பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற என் தனிவிருப்பத்தை செயல்படுத்தவே என் பதவியை ராஜினாமா செய்தேன் என்று அங்கி தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜினாமா குறித்து பேஷ்புக் நிறுவனம் கூறுள்ளதாவது:-

இந்திய பேஷ்புக் நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இருந்தே  பணியாற்றி வந்த அங்கி தாஸ், கடந்த 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும்  சேவைகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார்.

இதில் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மோகன் நன்றி தெரிவித்ததோடு  அங்கி தாஸின் சிறந்த எதிர்க் காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்