ஆந்திர பிரதேசம் : கணவர் முன்பு கர்ப்பிணி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் ..!

Default Image

ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது.

அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் கர்ப்பிணிப் பெண்ணை அங்கிருந்து கடத்தி சென்ற கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு முட்புதர் அருகே விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ரயில்வே காவல் துறையினரிடம் இந்த தகவலை கூறுவதற்கு முயற்சித்தபோது ரயில் நிலையத்தில் எந்த அதிகாரியும் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டங்களும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்