டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!

Policeman shot dead in Delhi High Court ...!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள கோட்கசிம் தெஹ்ஸிலில் இருந்து வரும் 30 வயதான கான்ஸ்டபிள் ப்ரிமா ஃபேசி எனும் காவலர் இன்று வழக்கம் போல பாதுகாப்பு பணிக்காக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்துள்ளார். இந்நிலையில், இவர் காலை 9:30 மணி அளவில் திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தெரிவித்த புது டெல்லி  துணை போலீஸ் கமிஷனர் தீபக் யாதவ் அவர்கள், இதுவரை தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை, தொடர்ந்து காவலரின் தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.