மனிதனைக் கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை.! சுட்டு கொலை செய்த துப்பாக்கி சுடும் வீரர்.!

Default Image

உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்களை தின்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சுட்டு கொள்ளப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக மனிதர்களை உண்ணும் சிறுத்தை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார்.

உணவைத் தேடி கிராமத்திற்கு வந்த அந்த சிறுத்தையானது சாலமனால் சுட்டு கொள்ளப்பட்டது. சாலமன், சுடப்பட்ட இந்த சிறுத்தையானது  9 அல்லது 10 வயதான பெண் சிறுத்தை எனவும் வாயில் மேல் கோரைப்பல் இல்லாமலும் தேய்ந்து போன நகங்களையும் கொண்டிருந்தது எனவும் கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக ஒரு சிறுத்தையை மனிதர்களை உண்ணும் சிறுத்தை என வனத்துறையினர் அறிவித்தனர். தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொல்லப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார்.

உணவைத் தேடி கிராமத்திற்கு வந்த அந்த சிறுத்தையானது சாலமனால் சுட்டு கொள்ளப்பட்டது. சாலமன், ‘சுடப்பட்ட இந்த சிறுத்தையானது 9 அல்லது 10 வயதான பெண் சிறுத்தை எனவும் வாயில் மேல் கோரைப்பல் இல்லாமலும் தேய்ந்து போன நகங்களையும் கொண்டிருந்தது’ எனவும் கூறினார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி சுடும் வீரராக இருந்து வரும் சாலமன், வன அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 1 புலி மற்றும் 6 சிறுத்தைகளை கொன்றுள்ளார். சில கிராமங்களில், சிறுத்தைகளின் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்