#Breaking: நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு -நீதிமன்றம் உத்தரவு

Default Image

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதுஇந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னர் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.இறுதியாக குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று  குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி  செய்த நிலையில் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.தற்போது குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை 3-வது முறையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்