நேபாளத்தில் 40 இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.!

Indian passenger bus

நேபாளம்: நேபாளத்தில் இந்தியர்கள் 40 பேருடன் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போகராவில் இருந்து காத்மாண்டுவுக்கு சென்று கொண்டிருந்த, இந்த பேருந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தற்பொழுது, இந்த விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது, விபத்து காட்சியில் வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது.

தனாஹுனில் உள்ள மாவட்ட போலீஸ் அலுவலகத்தைச் சேர்ந்த டிஎஸ்பி, இந்த விபத்தை உறுதி செய்து, பேருந்து ஆற்றங்கரையில் கிடப்பதாகத் தெரிவித்தார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் யாரேனும் உயிழந்தார்களா? காணாமல் போய்விட்டார்களா? என்பது குறித்த கூடுதல் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்