இந்தோ-பூட்டான் எல்லையில் சதுப்பு நிலத்தில் சிக்கி 45 வயது யானை உயிரிழப்பு..!

அசாம் மாநிலம், உதல்குரி மாவட்டத்தில் இந்தோ பூட்டான் எல்லையில் ஹட்டிகோர் என்ற இடத்தில் ஜம்போ கூட்டத்திலிருந்து பிரிந்த 45 வயது பழமையான ஜம்போ யானை, கடந்த புதன் கிழமை சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த யானை சிக்கியிருந்தததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையின் உடலை சதுப்பு நிலத்திலிருந்து மீட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்போ யானை தனது கூட்டத்துடன் செல்லும் பொழுது சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த்துள்ளதாக சந்தேகப்படுகின்றோம் என்று கூறியுள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025