7-வது மாடியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்! நெஞ்சை உலுக்கும் வீடியோ!

viral video

சூரத் : பாலில் உள்ள ஸ்ரீபாத் செலிப்ரேஷன்ஸ் பகுதியில்  7-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தின் பாலில் பகுதியில் பெரிய கட்டடம்  ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து இரண்டு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது  கீழே விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவன் பவ்யா கல்சாரியா என்று தெரிய வந்துள்ளது.

குழந்தையின் தாய் மற்றும் அத்தை வீட்டைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 7-வது மாடியில் பவ்யா கல்சாரியா விளையாடி கொண்டு இருந்த நிலையில், இரும்புக் குழாய் வழியாக  கிரில்லில் உட்கார முயன்றார். அப்போது, திடீரென சமநிலை இழந்து கீழே விழுந்தார். கிரில் சற்று இடைவெளியாக இருந்த காரணத்தால் குழந்தையின் உடல் சுலபமாக நுழைந்துவிட்டது.

கீழே விழுந்த தகவலை அறிந்த  குடும்பத்தினர் பவ்யா கல்சாரியாவை மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவத்திற்குப் பிறகு,  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் கிரில்களின் சரியான மறுவடிவமைப்பு உறுதி செய்யுமாறு சங்கத் தலைவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

7-வது மாடியில் இருந்து குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்