சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.! 

Naxalites Encounter in Chhattisgarh

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) – நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் (STF) நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் (STF), நக்சலைட்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பகுதியில் இருந்து பல்வேறு ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மாவட்ட எஸ்,பி தண்டேவாடா கவுரவ் ராய் ANI செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி பாதுகாப்பு படையினர் (STF) ரோந்து பணியில் ஈடுபட்டு நேற்று (வியாழன்) திரும்பி கொண்டு வந்து கொண்டு இருக்கையில், நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கியதாகவும்  அதன் பிறகு STF பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் போலீஸ் அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்