அதிர்ச்சி….ஹோட்டலில் ‘Mouth Freshener’ சாப்பிட்ட 5 இரத்த வாந்தி.!

Mouth Freshener
Mouth Freshner: டெல்லியின் குருகிராமில் உள்ள ஹோட்டலில் நடந்த விருந்தில் வாய் புத்துணர்ச்சி பெறுவதற்காக உலர் ஐஸ் (Dry Ice) கலந்த மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்ட 5 பேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

READ MORE – எச்சரிக்கை…டெல்லியில் குறைந்து தமிழகத்தை வாட்டும் வெப்பநிலை.!

குருகிராமில் உள்ள லாஃபோரெஸ்டா என்ற ஹோட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு குழு  உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, ஹோட்டல் ஊழியர் ஒருவர்  அவர்களுக்கு வாய் ப்ரெஷ்னரை வழங்கியதாக கூறப்படுகிறது.

READ MORE – மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவோம்.. மிரட்டல் விடுத்த கர்நாடகா நபர்!

அதை உட்கொண்டவுடன், அவர்கள் வாயில் எரியும் உணர்வை அனுபவித்தாகவும் அதைத் தொடர்ந்து இரத்த வாந்தி எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், அவர்கள்  ஆம்புலன்ஸ் மூலம் குருகிராமில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

READ MORE – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்

இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்திற்கு தெரிந்ததும், ஹோட்டல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் புகாரை கையில் எடுத்துக்கொண்ட போலீசார், ஹோட்டலில் கொடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து, இவர்களுக்கு உணவு பரிமாறிய ஊழியரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்