இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா 43 பேர் பலி

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,840ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,815 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,840 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,22,335 லிருந்து 1,25,028ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,386 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,104 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,29,53,980 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,98,65,36,288 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,26,795 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்