காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் முக்கியத்தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் பலி..!

Default Image

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் இயக்கத்தின் முக்கிய தளபதி மெஹ்ரான் யாசின் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பலியானவர்கள் அதிகமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்போடு தொடர்புள்ளவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir