உ.பி.யில் பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு.. 5 பேர் காயம்..!

இன்று அதிகாலையில் ஒரு பேருந்து கான்பூரிலிருந்து டெல்லிக்கு சுமார் 45 பயணிகள் ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்தபோது, உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தின் தப்பல் பகுதியில் சென்றபோது அந்த பேருந்து கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறு அவர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024