கர்நாடகாவில் நேற்று 3.90 லட்சம் லிட்டர் பீர் விற்பனை.!

Default Image

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் மது பிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும்  மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.

கொரோனா பாதிப்பால் 40 நாட்களாக மூடப்பட்ட  மதுக்கடை  நேற்று டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற  பல மாநிலங்களில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால்,  மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து மதுக்கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நின்று  மது வாங்கிச் சென்றனர்.

 நேற்று  மட்டும் கர்நாடக மாநிலத்தில் ரூ. 45 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. நேற்று மட்டும் 3.90 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 8.50 லட்சம் லிட்டர்  மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்