அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Default Image

அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

அசாமில் உள்ள கோக்ராஜர் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் புதிதாக யுனைடெட் லிபரேஷன் ஆஃப் போடோலாண்ட் (யுஎல்பி) குழுவின் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இம்மாவட்டத்தில் உள்ள உல்தபாணி ரிசர்வ் வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததுள்ளது. தீவிரவாதிகளின் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து,  அந்தப் பகுதியில் இருந்த இரண்டு பிஸ்டல்கள் (9 மிமீ மற்றும் 7.65 மிமீ), எட்டு ரவுண்ட் லைவ் வெடிமருந்துகள், 14 ரவுண்ட் காலி தோட்டாக்கள், எட்டு கைக்குண்டுகள் மற்றும் மற்ற போர் கருவிகள் ஆகியவற்றை அவ்விடத்திலிருந்து கைப்பற்றினர்.

மேலும், கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகள் ஜங்சார் முஷாஹரி மற்றும் ஜனக் குமார் பிரம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் என்டிஎப்பி (போரோலாண்டின் தேசிய ஜனநாயக முன்னணி) உறுப்பினர்கள் என்றும் அவர்கள் சமீபத்தில் யுஎல்பி இல் சேர்ந்திருப்பதாகவும் சிறப்பு டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்