கொரோனாவை எதிர்த்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் போர் தொடுக்க வேண்டும் – மோடியின் உரை.!

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு முன்ன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு என்றும் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுக்க வேண்டும் என கூறினார். நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்றும் இதனை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்