கர்நாடகாவில் 12,545 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

Default Image

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக 12,545 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2 வாரமாக 9-ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 9,464 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,40,411 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக 12,545 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 12,545 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,34,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 98,326 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,067 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்