ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்.!

ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள பச்சேரி பகுதியில் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு இல்லம் உள்ளது. இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒண்டிவீரன் நினைவு நாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று! வீரவணக்கம்! பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய அவ்வீரனுக்கு மணிமண்டபம் அமைத்திட நிதி ஒதுக்கி அவரது பெருமையைப் போற்றியது தலைவர் கலைஞரின் அரசு! வாழ்க ஒண்டிவீரனின் புகழ்! வளர்க நாட்டுப் பற்று! என பதிவிட்டுள்ளார்.

unknown node
ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்.!