விழுப்புரத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி.
தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விழுப்புரத்தில் 33 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 86ஆக உயர்ந்துள்ளது.