திருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
unknown nodeஇந்நிலையில், திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ஜஃபிரா எனும் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.