நம் உடலிலுள்ள வெப்பத்தினால் கால்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. இந்த பித்த வெடிப்பு ஒருவகையான பூஞ்சைகளால் வருகின்றன. பித்தவெடிப்பு ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால். அது கால்பகுதியில் அதிகமாக வெடிக்க ஆரம்பித்து இரத்தக்கசிவு ஏற்படும்.
அதனால் பயங்கர வலி நமக்கு ஏற்படும். அதிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளது.இதில் ஏதாவது ஒன்று பயன்படுத்தினால் போதும்.
unknown nodeதினமும் குளித்து முடித்துவிட்டு பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்னர் பாதத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் இருக்கும். மேலும் இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் காலை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது.
unknown nodeவேப்பிலை , மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு நீங்கும்.
வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் உள்ள வெடிப்பில் தடவவேண்டும்.
பாதங்கள் ஈரப்பதமாக இருக்க இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன், ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து பேஸ்ட் போல செய்து தடவ வேண்டும்.