முகச்சுருக்கத்திற்கு முடிவு கட்டும் கேரட்!

இன்று சிறியவர்கள் கூட மிக வயதானவர்கள் போல காட்சியளிப்பது இந்த முக சுருக்கத்தால் தான். நாம் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல கெமிக்கல்

இன்று சிறியவர்கள் கூட மிக வயதானவர்கள் போல காட்சியளிப்பது இந்த முக சுருக்கத்தால் தான். நாம் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கிறோம். இதனால் தான் நமது சருமத்தில் பல வகையான பாதிப்புகள் உண்டாகிறது.

தற்போது, நாம் இந்த பதிவில் முகச் சுருக்கத்தை தடுப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

செய்முறை : 1

முதலில் இரண்டு கேரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு வேக வைத்து மசித்து, முகத்தில் தடவ வேண்டும். அதனை நன்கு காய வைத்து பின் முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும்.

unknown node

அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால், முக சுருக்கம் நீங்கி முகம் பளபளவென இருக்கும்.

செய்முறை : 2

unknown node

கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த்து வந்தால், முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக கிடைத்து, கரும்புள்ளி, முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைக்க உதவுகிறது.

செய்முறை : 3

நாம் தினந்தோறும் பல வகையான ஜூஸ்களை குடிக்கிறோம். ஆனால் நாம் அதிகமாக இயற்கையான பானங்களை விரும்பி குடிப்பதில்லை. ஆனால், அந்த ஜூஸில் தான் நமது சருமத்திற்கும், உடலுக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

unknown node

அந்த வகையில், நாம் தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்தி வந்தால், நமது சரும அழகை மெருகூட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.