வரலாற்றில் இன்று தான் உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது…!!

Default Image

வரலாற்றில் இன்று – மார்ச் 20, 1992 – உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார். திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும்பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார்.

இந்திய சினிமாத்துறையில் “ஆஸ்கார் விருது”, “பாரத ரத்னா” விருது ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் சத்யஜித்ரே ஒருவர்தான். “பாரத ரத்னா” விருது கிடைத்ததை யொட்டி சத்யஜித்ரே தயாரித்த புகழ் பெற்ற சினிமா படங்கள் டெலிவிஷனில் ஒருவார காலம் ஒளிபரப்பப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்