காவலர் தாக்கியதால் உயிரிழந்த குடிமகன் – காவலர் கைது!

A man has been arrested for causing the death of a man who was attacked by a police officer during a vehicle check in Salem district.

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தற்பொழுது முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.