சொத்து விவகாரம் தகாத வார்த்தைகளால் பெண்ணை மிரட்டிய நபர்..,

வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக  இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்

குலசேகரம்:வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக  இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சசிகுமார் என்பருக்கு ரூ.54 லட்சம் தொகை பேசி விற்பனை செய்துள்ளாராம்.அப்போது 29 லட்சம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரூ.25 லட்சத்தை கொடுக்காமல் சசிகுமார் தாமதம்  செய்துள்ளார். இந்தநிலையில் பாக்கி பணத்தை வசந்தகுமாரி நேற்று முன்தினம்  சசிகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வசந்தகுமாரியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.இதுகுறித்து வசந்தகுமாரி திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.