மழை இல்லை...5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

The Chennai Meteorological Department has forecast dry weather for the first 5 days in Tamil Nadu.

சென்னை:தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு (டிச. 25 ஆம் தேதி வரை) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை எச்சரிக்கை:

இன்றும்,நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும்,

கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை ஏதுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node