ஆடி பூரம் 2024 ல் எப்போது ? குழந்தை வரம் தரும் ஆடிப்பூரம் ..!

aadi pooram

ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ;

ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாள் அவதரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இந்நாளை ஆண்டாள் ஜெயந்தி என்றும் கொண்டாடுகின்றனர்.

சித்தர்களும் யோகிகளும் தவத்தை இந்நாளில் தான் துவங்குவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. இந்நாளில் ஆண்டாள் ஜெயந்தி அன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய வளைகாப்பு திருவிழாவாகும் .இந்நாளில் பல கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது.

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனி சிறப்பு. மானுட பிறவியில்  கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல் இந்நாளில் அம்மனுக்கும் வளைகாப்பு நடத்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு வளையல்களை மாலை போல் அலங்கரித்து சிறப்பு அலங்காரம் செய்து வளைகாப்பு நடத்தப்படுகிறது.

திருமணம் வரம் வேண்டியவர்கள் மற்றும்  குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அம்மனுக்கு வளையல்களை வாங்கி கொடுக்கலாம். பிறகு வழிபாடு நடந்த பிறகு பிரசாதமாக பெண்களுக்கு  கொடுக்கப்படும் .இதை அணிந்து கொண்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன் பிறகு இரண்டு நெய் தீபங்களை அம்மன் சன்னதியில் ஏற்றி வழிபாடு செய்யவும் .

வீட்டில் வழிபடும் முறை;

பூஜை அறையை சுத்தம் செய்து அம்பிகையின் திரு உருவப்படத்தையும் சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் அம்பிகையின் படத்திற்கு  வளையல்களை மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அதன் பிறகு சிகப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்து மங்களப் பொருட்களை வைத்து விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் அல்லது சர்க்கரை கலந்த பால் நெய்வேத்தியமாக வைத்து படைக்கலாம் .அதன்பின் அம்பிகைக்கு உரிய நாமங்களான அபிராமி அந்தாதி, திருப்பாவை,  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்து பூஜைகளை முடிக்கலாம் .

ஆடிப்பூரம் 2024 -ல் எப்போது ?

இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை5;45 துவங்கி  ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை மாலை 8;30  மணிக்கு முடிவடைகிறது. ஆனால் ஆகஸ்ட் 7ஆம் தேதியே ஆடிபூரமாக  கொண்டாடப்பட உள்ளது. அதிலும் காலை 9 ;15 முதல் 10 ;15 மணி வரையிலும் பிறகு காலை 10:45 முதல் 11; 45 வரையிலும் வழிபாடுகளை மேற்கொள்ள சிறந்த நேரமாக கூறப்படுகிறது.

ஒரு செயலை முழுமை பெற செய்யக்கூடிய சக்தி ஆடிபுரத்திற்கு உள்ளது அதனால் நீங்கள் நடக்காது என நினைக்கும் காரியங்களை இந்நாளில் அம்மனை  மனம் உருக வேண்டி செய்து பாருங்கள் நிச்சயம் நிறைவேறும். அம்பாளின் அருளைப் பெற ஆடிப்புரத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்