திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!தொடர் விடுமுறை எதிரொலி …..

Default Image

சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது.

இலவச தரிசனத்திற்காக 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, ஆழ்வார் ஏரியை சுற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இரவில் தங்க அறைகள் கிடைக்காமல் கடும்குளிரில் அவதிப்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரத்தில் தங்கினர்.

வார விடுமுறை நாளான நேற்று மட்டும் 89,993 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 3.84 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்