புனிதர் பட்டங்களை 5 பேருக்கு வழங்க உள்ளதாக வாட்டிகன் அறிவிப்பு!

Default Image

வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தேவனின் பாதையில் பயணிக்கும் 5 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக  அறிவித்துள்ளார்.

கிறித்துவம் தழைப்பதற்கான சேவையில் ஈடுபட்டு மனித உயிர்கள் மற்றும் உரிமைகளைக் காக்க அதிசயங்களை நிகழ்த்தியதை அங்கீகரித்து இந்த புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. இதில் ஆறாம் போப் பால் மற்றும் ஆர்ச் பிஷப் ஆஸ்கர் ரோமெரோ ஆகியோரும் புனிதர் பட்டத்திற்கு வாட்டிகனின் அங்கீகாரம் பெற்றுள்ளனர். இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அக்டோபர் மாதத்தில் பிஷப்புகளின் சதஸ் மாநாட்டில் ஆறாம் போப் பால் மற்றும் ரோமெரோ ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்