திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரத்திற்கு அருகில் கட்டடப் பணி தடுத்து நிறுத்தம்!

Default Image

இந்து அறநிலையத் துறையினரால் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய கட்டடப் பணி  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 21 கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் ராஜகோபுரம் 220 அடி உயரம் கொண்டது.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இதனை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ராஜகோபுரத்திற்கு அருகில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி குழிகள் தோண்டப்பட்டு கட்டுமானப் பொருட்களும் இறக்கப்பட்டன.

ஆனால் இந்த கட்டடப் பணியால் கோவிலின் ராஜகோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பணியை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்