#Breaking:மண்டல பூஜை முடிவு – சபரிமலை கோயிலில் நடை அடைப்பு..!

Kerala: Sabarimala temple closed due to the end of the Zonal and Capricorn Lantern Festival.

கேரளா:மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் சபரிமலை கோயிலில் நடை அடைப்பு.

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை கோயிலில் மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் நடை சாத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக,காலை 5 மணிக்கு நடைபெற்ற பூஜையில் பந்தல அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில்,சபரிமலை கோயிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,கும்பம் மாத பூஜைக்காக பிப்.12 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும்,அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும்,பிப்.12 ஆம் தேதி முதல் பிப்.17 ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.