இன்னும் அட்ஜஸ்ட்மென்ட் தொடருதா? நடிகை யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!

yashika aannand

சினிமாவில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளிடம் சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள்  அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக நடிகைகள் வெளிப்படையாகவே சமீபகாலமாக கூறி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விசித்ரா தன்னிடம் ஆரம்ப காலகட்டத்தில்  தெலுங்கு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக அவருடைய பெயரை கூறாமல் தெரிவித்து இருந்தார்.

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா ”  கடந்த காலங்களில் நானும் இங்கு பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் அல்லரி நரேஷின் தந்தை, மறைந்த இயக்குனர் ஈவிவி சத்யநாராயணா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார். அவருடன் அட்ஜஸ்ட் செய்தால் அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக மற்றோரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள்.

நான் அவரிடமே சொன்னேன் சார் இப்ப இந்த படத்தில் நடிக்க பணம் கொடுத்திருக்காங்க. இன்னொரு பட வாய்ப்பு எனக்கு வேண்டாம்” என்று கூறியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்த நிலையில், அவர்களை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் இன்னும் தொடருதா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா!

இது குறித்து பேசிய அவர் ” அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் இப்போது தொடர்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நடிகைகள் சினிமாவில் பெரிய அளவுக்கு பிரபமாவதற்கு முன்பு அதாவது ரொம்பவே கஷ்டபடும் சமயத்தில் வேண்டுமானால் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். ஒருத்தர் அப்படி கேட்க வருகிறார் என்றால் அவருடைய மனநிலையில், இவுங்க இப்போது தான் வளர்ந்து வருகிறார் இவரிடம் நாம் இப்படியெல்லாம் கேட்கலாம் என்று தோணும்.

ஆனால், அதுவே நாம் ஒரு லெவலுக்கு மேல் வளர்ந்து விட்டோம் என்றால் அதனை பற்றி நம்மளிடம் கேட்கவே யோசிப்பார்கள். ஆனால், நீங்கள் புதிதாக சினிமா துறையில் நுழைகிறீர்கள் என்றால், நீங்கள் தொழில்துறைக்கு புதியவராக இருக்கும்போது, மக்களுக்கு உங்களை யார் என்று தெரியாது. எனவே, அந்த மாதிரி சூழ்நிலையில், உங்களை அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தில் தள்ளுவது மிகவும் எளிதானது.

ஒரு லெவலுக்கு மேல் நீங்கள் பிரபலமாகிவிட்டிர்கள் என்றால் உங்களிடம் அதனை பற்றி பேசவே யோசிப்பார்கள். அதற்கு பிறகும் உங்களிடம் அந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் பற்றி எதாவது வந்தது என்றால் அதில் இருந்து நீங்க தன எஸ்கேப் ஆகி கொள்ள வேண்டும்” எனவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் கடைசியாக சில நொடிகளில் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
good bad ugly VS idly kadai
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head