சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜயாவை மிரட்டும் முத்து.. என்ன நடந்திருக்கும்?..

siragadikka asai19

சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூலை 19] விறுவிறுப்பான கதையை  இந்த பதிவில் காணலாம்.

காலையில விடிஞ்சதும் மனோஜம் ரோகிணியை விஜயா ரூம்  கதவை தட்டுறாங்க, ஆனால் விஜயா திறக்கவே இல்ல .  முத்து பார்வதிக்கு கால் பண்ணி நடந்ததெல்லாம் சொல்லி வர சொல்றாங்க. மனோஜ பார்த்து பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப அம்மா பாசம் வேஷம் போட்டுட்டு இருக்கியானு  கேக்குறாரு. எனக்கு அம்மா மேல பாசம் அதிகம் டா உன்ன மாதிரி இல்ல அப்படின்னு சொல்றாரு.

உடனே  மீனா அவரு பண்ண வேண்டியது பண்ணிட்டு தான் வந்திருக்கிறார் யார் கூப்பிட்ட ஆன்ட்டி வருவாங்களோ அவங்களுக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்காங்க அப்படின்னு சொல்றாங்க .இப்ப ஸ்ருதி சின்ன விஷயத்தை ஏன்  பெருசாக்கிறீங்க ஆன்ட்டி தூங்கி எந்திரிச்சதும் அவங்களே வந்துடுவாங்க அப்படின்னு சொல்றாங்க . பார்வதியும் வந்துடறாங்க அண்ணாமலை கிட்ட போயி அண்ணே விஜயா மனோஜ் மேல உள்ள பாசத்துல அப்படி பண்ணிட்டா அதுக்காக பேசாம இருப்பீங்களா அவளை மன்னிச்சிருங்க அப்படின்னு சொல்றாங்க.

vijaya ,muthu

இப்போ விஜயா கதவு ரூம் கிட்ட போயி கதவை தட்டுறாங்க நான் பார்வதி வந்து இருக்கிறேன் நீ வெளில வா இல்லைனா நானாவது உள்ள வரேன் கதவ திறரேன்னு சொல்றாங்க உடனே விஜயாவும் கதவை திறந்து பார்வதியை உள்ள இழுத்துட்டு மறுபடியும் கதவை லாக் பண்ணிடறாங்க. பார்வதி ஒருவழியா அவங்கள சமாதானப்படுத்தி வெளியில கூட்டிட்டு வந்துடறாங்க. மறுபடியும் அண்ணாமலை கிட்ட பார்வதி பேசுறாங்க. ஏதோ பையன் மேல உள்ள பாசத்துல அப்படி பண்ணிட்டானே அவ பண்ணது தப்பு தான் அவள மன்னிச்சு பேசுங்கன்னு சொல்றாங்க .இப்ப முத்து சொல்றாரு  அப்பாகிட்ட அவங்கள மன்னிப்பு கேட்க சொல்லுங்க அத்தை அப்படின்னு சொல்றாங்க,

பார்வதியும் விஜயாவா மன்னிப்பு கேட்க சொல்றாங்க.. இப்போ அண்ணாமலை சொல்லிடுறாரு எங்கிட்ட மன்னிப்பு கேட்கக்கூடாது மீனா கிட்ட தான் மன்னிப்பு கேக்கணும் . உடனே மனோஜ் அம்மா போயி மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணுமா அப்படின்னு சொல்றாரு. இப்ப முத்து  சொல்றாரு அப்போ நீ கேளு நீதானே கிரிமினல் நம்பர் ஒன்னு அப்படின்னு சொல்றாரு. ரோகிணியும் மனோஜ் எதுக்கு மீனா கிட்ட மன்னிப்பு கேக்கணும் அப்படிங்கிறாங்க, என்ன பார்லர் அம்மா யார் தப்பு பண்ணி இருந்தாலும் என்ன வயசு இருந்தாலும் தப்பு பண்ணா மன்னிப்பு கேட்டு தானே ஆகணும் அப்படின்னு சொல்றாங்க..

அன்னைக்கு என்னம்மா சொன்ன இவர் யாரையும் ஏமாத்தலை இவர் தானே ஏமாந்தாரு அப்படின்னு அவன் எங்களை தான் ஏமாற்றி இருக்கிறான் அப்படின்னு சொல்றாங்க. அண்ணாமலையும் இப்போ மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதானு  கேட்கிறார். இப்போ விஜயா மீனாவை பார்த்து என்னடி இது நடக்கணும்னு தானே கனவு கண்டிருந்த இப்போ ஐஸ் கட்டிய உன் தலையில வச்ச மாதிரி இருக்குமே அப்படின்னு கேக்குறாங்க. என் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் எவகிட்டயும் இறங்கி போக மாட்டா இந்த விஜயா  அப்படின்னு சொல்றாங்க .

vijaya,

அண்ணாமலை சொல்லுறாரு  இந்த திமிருக்கு தான் இவகிட்ட நான் பேசல அப்படின்னு சொல்லிடுறாரு. ஸ்ருதியும் ஆன்ட்டி உங்க மேலையும் பாதி தப்பு  இருக்கு நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்னு சொல்லிடறாங்க. இப்ப விஜயாவும் மீனா பக்கத்துல போயிட்டு இத்தனை பேர் முன்னாடி என்ன அசிங்கப்படுத்திட்ட இல்ல எல்லாம் அந்த நகைக்காக தானே அப்படின்னு கோவமா கையில இருந்த வளையல கழட்டி மீனா மேல வீசிறாங்க.

இதைப் பார்த்த மீனாவுக்கு கண்ணுல இருந்து தண்ணி ஆறா போகுது. இப்ப முத்து  சொன்னாரு அத்தை இத வேற யாராச்சும் பண்ணி இருந்தா நடக்கிறதே வேற அப்படின்னு மெரட்டறாரு .அதுக்கு விஜயா  சொல்றாங்க என்னடா என் தலையை எடுத்துடுவியா எடுத்துக்கோ ஆனா உன் பொண்டாட்டி கால்ல மட்டும் விழமாட்டேன் அப்படின்னு சொல்றாங்க .இதோட இன்னைக்கு  எபிசோடு முடிந்தது. நாளைக்கான விறுவிறுப்பான கதைக்களத்தை தெரிந்து கொள்ள காத்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்