சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவிற்கு திருஷ்டி கழிக்கும் முத்து..! பொறாமையில் விஜயா..

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 10]எபிசோடில் மீனா செய்த செயலுக்கு முத்து அண்ணாமலை பாராட்டினார்கள்   .. விஜயாவிடம் மனோஜ் லெட்டர் விஷயத்தை கூறுகிறார்..

bharvathi,vijaya (1)

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 10]எபிசோடில் மீனா செய்த செயலுக்கு முத்து அண்ணாமலை பாராட்டினார்கள்   .. விஜயாவிடம் மனோஜ் லெட்டர் விஷயத்தை கூறுகிறார்..

விஜயா  டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. அப்போ மீனா சாப்பாடு எடுத்துட்டு வர்றாங்க.. சாப்பாடு எடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா அப்படின்னு விஜயா  கேக்க அதுக்கு  மீனா சொல்றாங்க டிராபிக் ஆயிடுச்சு  அத்தை, ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லிக்கிட்டே இரு அப்படின்னு சொல்லிட்டு ஸ்டுடென்ட்ஸ் எல்லாத்தையுமே சாப்பிட சொல்றாங்க. இப்போ மீனா கிட்ட எங்களுக்கு சாப்பாடு எடுத்து வைனு .. சொல்றாங்க மீனாவும் எடுத்து வைக்க அதுக்கு பார்வதி சொல்றாங்க என்ன பிரியாணி மாதிரி இருக்கு பிரியாணி செஞ்சியா வீட்டுல அப்படின்னு கேக்குறாங்க இல்லையே இது கடை பிரியாணி மாதிரி இருக்கு அப்படின்னு பார்வதி சொல்ல ஏன் வீட்ல உனக்கு சமைக்க முடியாதா அப்படின்னு விஜயா திட்டுறாங்க .

இல்லத்த  பூ கொடுத்துட்டு வர வழியில லேட்டாயிடுச்சு  அதான் நீங்க பசியோட இருப்பீங்கன்னு வாங்கிட்டு வந்தேன் அப்படின்னு சொல்றாங்க. சரி சரி எடுத்து வை ..  மீனாவும்  குடுத்துட்டு கிளம்புறாங்க அப்போ டான்ஸ் கிளாஸ்க்கு வந்த ரெண்டு லவ்வர்ஸும் சாப்பாடு தனியா நின்னு சாப்பிட்டுட்டு இருக்காங்க அதை பார்த்து மீனாவுக்கு டவுட் வருது  மொறசுட்டு போறாங்க.. இப்போ சிக்னல்ல சத்யா போலீஸ்கிட்ட மாட்டிறாரு  வண்டியில சரக்கு வச்சிருக்காரு  அத பாத்தா போலீஸ் என்னய்யா அது அப்படின்னு கேக்குறாரு அதுக்கு சத்யா சொல்றாரு குடிச்சுட்டு தானே வண்டி ஓட்டக்கூடாது சரக்கு வாங்கிட்டு போறதுக்கு ஒன்னும் ரூல்ஸ் எல்லாம் இல்ல அப்படின்னு தெனாவட்டா பதில் சொல்றாரு.

annamalai,vijaya (1)

முத்துவும்  அங்கேதான் நிக்கிறாரு சத்யாவும் முத்துவும்  ஜாடையா  பேசிட்டு இருக்காங்க போலீசுக்கு ஒண்ணுமே புரியல இப்போ ரெண்டு பேரயும்  செக் பண்ணிட்டு அனுப்பிடறாங்க.. மீனா வீட்டுக்கு போறாங்க அங்கே விஜயா ஏப்பம் விட்டுட்டே இருக்காங்க. அத்தை என்ன ஆச்சு அப்படின்னு கேக்குறாங்க ஏண்டி  பிரியாணியில் என்ன  கலந்த அப்படின்னு கேட்க வராங்க அதுக்குள்ள ஏப்பம் வந்துகிட்டே இருக்கு ஸ்டாப் ஆகவே இல்ல. இப்ப அவங்களுக்கு ரோகிணி கசாயம் வச்சு கொடுத்துட்டு இருக்காங்க. அந்த டைம்ல முத்து வராரு என்ன மீனா இன்னைக்கு விருந்து சாப்பாடு பலமா இருக்கும் போல ஏப்பம் எல்லாம் பயங்கரமா இருக்கு அப்படின்னு சொல்றாரு.

அண்ணாமலை விஜயாவை திட்ட ஆரம்பிக்கிறாரு மீனாதான் நல்லா கீரை ,கூட்டு சாம்பார் செஞ்சி இருந்தாலே நீ அதை சாப்பிடாம பிரியாணி வாங்கி சாப்பிட்ட அப்படின்னு கேக்குறாரு . இப்ப ஒரு நிமிஷம் விஜயா மீனாவ பாக்கறாங்க இந்த பிரியாணிய வாங்கி கொடுத்ததே மீனாதான் அப்படின்னு சொல்லவும், எல்லாருமே முழிக்கிறாங்க.. இப்ப முத்து என்ன ஆச்சு மீனா   வண்டியில போகையில ஏதும் விழுந்துட்டியா அப்படின்னு கையெல்லாம் பார்க்கிறாரு . அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க .போற வழியில ஒரு தாத்தாவும் பாட்டியும் பசியோட இருந்தாங்க அவங்களுக்கு அந்த சாப்பாடு கொடுத்துட்டேன் அப்படின்னு சொல்றாங்க இதை கேட்ட அண்ணாமலையும் முத்துவும் நல்லது  தானே பண்ணி இருக்க அப்படின்னு பாராட்டுறாங்க.

manoj (6) (1)

ஆனா இப்பவும் விஜயா திட்டுறாங்க நீ கொண்டு போய் பிச்சைக்காரங்களுக்கு எல்லாம் சாப்பாடு குடுப்பியா அவங்க கேட்டா அஞ்சு பத்துனு  கொடுக்க வேண்டியதுதானே.. இதை கேட்ட அண்ணாமலை  விஜயாவுக்கு புத்தி சொல்றாரு.. இப்ப முத்து மீனாவுக்கு நீ பண்ணு நல்ல காரியத்துக்கு திருஷ்டி கழிக்கணும் மீனா அப்படின்னு சொல்லிட்டு திருஷ்டி சுத்தி போடுறாரு. இத பாத்துட்டு விஜயா எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாம் அப்படின்னு சலிப்பா சொல்லிட்டு போறாங்க.. நைட்டு மனோஜ் தூக்கம் வராமல் லெட்டர் எடுத்து படிச்சிட்டு இருக்காரு.

விஜயாவுக்கு கால் பண்ணி வெளியில வாங்கமான்னு சொல்றாரு .விஜயாவும் இவனோட பெரிய தொல்லை என்னை தூங்கவே விட மாட்டேங்குற..  மொட்டை மாடிக்கு போயி என்னடா உன் பிரச்சனை அப்படின்னு கேக்குறாங்க.. அம்மா இந்த மாதிரி எனக்கு ஒரு லெட்டர் குடுத்துட்டு போனா யாருன்னு எனக்கு தெரியல அப்படின்னு சொல்லி அதை படிக்க சொல்றாங்க ..விஜயா படிச்சிட்டு பயந்து போயிடுறாங்க என்னடா இது உனக்கு மட்டும் போறவன் வரவன் எல்லாம்  லெட்டர் கொடுப்பானா.. அம்மா எனக்கே பயமா இருக்குதும்மா அப்படின்னு மனோஜ் சொல்றாரு..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்