சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியை க்ரிஷை வைத்து மிரட்டும் பி.ஏ ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 17] எபிசோடில் அவமானப் படுத்தப்பட்ட முத்துவிற்கு மீனா கொடுக்கும் பதிலடி..

muthu,meena (13) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 17] எபிசோடில் அவமானப் படுத்தப்பட்ட முத்துவிற்கு மீனா கொடுக்கும் பதிலடி..

செல்வத்தோட சொந்தக்காரங்க முத்துவை கீழே தள்ளிவிட்டு அசிங்கப்படுத்தி அனுப்பி விடுறாங்க.. வீட்டுக்கு வர்ற முத்து மீனாவை பார்த்து அண்ணாமலை விசாரிக்கிறாரு என்ன சீக்கிரம் வந்துட்டீங்க கூட்டம் இல்லையா அப்படின்னு கேக்குறாரு .அதுக்கு மீனா சொல்றாங்க இல்ல மாமா கூட்டம் எல்லாம் இருந்துச்சு ரொம்ப நல்லா பண்ணி இருந்தாங்க அதுலயும் இவருக்கு கிடைச்ச மரியாதை இருக்கே .. அப்படியே ராஜமரியாதை மாமா அப்படின்னு நக்கலா சொல்றாங்க. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு இதுதான்  மா நட்பு . இப்ப ரெண்டு பேருமே ரூமுக்கு போறாங்க.. செல்வத்தை மீனா திட்டுறாங்க ..காசோட அருமை தெரியாம செலவு பண்ணிட்டாரு.. அடுத்தவங்க முன்னாடி பெருமை காட்டணும்னு நினைச்சா இப்படித்தான் ஆகும் கல்யாண வீடு இப்போ போர்க்களம் வீடு மாதிரி ஆயிருச்சு அப்படின்னு சொல்றாங்க இதெல்லாம் கேட்டு முத்து அமைதியா இருக்காரு..

இப்போ அந்த பிஏ ரோகிணி ஓட பையன் விளையாடுற இடத்துக்கு போறாரு. கிரிஷ்  கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கிறான் அத கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்த பிஏ நீ தாண்டா அடுத்த சச்சின் உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவா ன்னு கேக்குறாரு  .க்ரிஷும்  சரின்னு சொல்லிட்டு எடுத்துக்கிறாரு. இப்போ மனோஜ் ஷோரூம் ல அந்த பாடிகார்ட்   ஒரு தட்டில் முட்டையும் இன்னொரு தட்டுல வாழைப்பழமும் வச்சு  சாப்பிட்டுட்டு  இருக்காரு இதை பார்த்த மனோஜ் ரோகிணி கிட்ட என்ன ரோகினி இவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கவே நான் தனியா ஷோரூம் வைக்கணும் போல அப்படின்னு பொலம்புறாரு. அதுக்கு ரோகினி சொல்றாங்க இதுக்கெல்லாம் சரின்னு சொல்லிட்டு தானே வேலைக்கு சேர்த்தோம்.

manoj ,Rohini (2) (1)

இப்போ அந்த பி ஏ கிட்ட இருந்து மெசேஜ் வருது ரோகினி ஓபன் பண்ணி பார்த்தா கிரிஷ்  கூட இருக்கவும் வேகமாக கால் பண்றாங்க நீ எங்கே இருக்க? என்று கேட்க நான் உன் பையன் கூட தான் இருக்கிறேன் கல்யாணி  அப்படின்னு பி ஏ  சொல்றாரு.. என் பையன ஒன்னும் பண்ணிடாத அப்படின்னு ரோகினி சொல்ல  உன் பையன நான் ஒன்னும் பண்ண கூடாதுனா  நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு நீ வா அங்க வச்சு எனக்கு என்ன வேணும்னு சொல்றேன்னு மிரட்டுறாரு .. இப்போ கார் செட்டில் முத்து கிட்ட செல்வம் மன்னிப்பு கேட்டு அழுகிறார்.. முத்துவும் சரி விடுடா அப்படின்னு சொல்லவும் இப்போ வந்த மொய்  பணத்தை எல்லாமே முத்து  கிட்ட கொண்டு வந்து கொடுக்கிறார் மீதி  பணத்தை கொஞ்சம் கொஞ்சமா தரேன் டா அப்படின்னு சொல்லுறாரு  .

முத்து சொல்லுறாரு  இதெல்லாம் எதுக்குடா நீ புடிடா அப்படின்னு சொல்லி கொடுத்துடுராரு  . இப்ப அந்த பணத்தை முத்து மீனா கிட்ட கொண்டு வந்து குடுத்துட்டு ..பாரு இதுதான் என்னோட பிரண்டு இதுதான் நட்பு அப்படின்னு பெருமையா சொல்றாரு .ஆனா அந்த ஓடுகாலி அப்பா காசுல  இதுவரைக்கும் ஒத்த ரூபா கூட கொடுக்கல என் அப்பாவை அவமான படுத்திட்டு ஓடினவன் கூட என்ன சேர்த்து வச்சு பேசாத அப்படின்னு சொல்றாரு .உடனே மீனாவும் நான் காச தேவை இல்லாம செலவு பண்ண வேண்டாம் னு  தாங்க சொன்னேன்.. ஏன் அவரு  கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திருக்கலாம்ல்ல ..

மேல ரூம் கட்டளைனா இந்த வீட்ல நமக்கு மரியாதை இருக்காதுன்னு உங்களுக்கும் தெரியும்  அதனால தான் நான் அப்படி நடந்துகிட்டேனு  மீனா சொல்றாங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடிச்சு இருக்காங்க. நாளைக்கு ப்ரோமோல  மீனா சிட்டிய பாக்க போயிருக்காங்க.. அங்க ரெண்டு பேருக்குமே வாக்குவாதம் நடக்குது அதுல சிட்டி மீனாவை புடிச்சு தள்ளி விட்டுறாரு ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்