ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலியைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

a. r. rahman hospital

சென்னை :பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிட்ட பின்னரே அவரது உடல் நலம் குறித்த விரிவான தகவல் தெரிய வரும்.

ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரது உடல்நலம் விரைவில் தேற சமூக வலைத்தள வாயிலாக வாழ்த்தி வருகின்றனர்.