பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

Gnanavel Raja ameer

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” அமீர் என்னை கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டார் அவர் தான் எங்களுக்கு துரோகம் செய்தவர். அந்த சமயம் எனக்கு சினிமாவை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது என்பதால் கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும் அவர் அப்படி சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக தாக்கி திருடன் என அமீரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியவுடன் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அமீருக்கு ஆதரவாக இறங்கி ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கண்டனங்களை அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தனர்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் ஞானவேல் இறுதியாக தான் பேசியது அமீர் அண்ணனுக்கு வருத்தம் அடைய செய்திருந்தது என்றால் அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியீட்டு அமீர் எதையும் கூறவில்லை.

இதனையடுத்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், அமீர் இந்த விவகாரத்தில் மிகவும் மன வேதனையில் இருக்கிறாராம். ஏனென்றால், அனைவரும் பார்க்க கூடிய யூடியூபில் ஒரு சேனலின் பேட்டியின் போது திருடன்  என்று தன்னை ஞானவேல் ராஜா கூறியதால்  அமீர் மிகவும் வேதனையில் இருக்கிறாராம். தன்னுடைய மகன் கூட என் இப்படி உங்களை பற்றி சொல்கிறார் என்ற கேள்வியையும் தன்னிடம் கேட்பதாக சிவகுமாருக்கு அமீர் மெசேஜ் செய்தாராம்.

ஆனால், அதற்கு சிவகுமார் எந்த பதிலையும் கூறவில்லையாம். இதனையடுத்து அமீர் இந்த விவகாரத்தை சும்மாக விட கூடாது என்று இருக்கிறாராம். ஞானவேல் பேசியது மிகவும் காயப்படுத்தி இருப்பதன் காரணமாக ஞானவேல் மீது மானநஷ்ட வழக்கு தொடர திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. எந்த பேட்டியில் அவர் அப்படி பேசினாரா அதே போலவே அனைவருடைய முன்பு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்